டிசம்பர் மாத ராசி பலன் – மகரம்!!

381

makaram

மதியாதார் முற்றம் மிதிக்காத நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள். உண்மையை உயிர்க் காற்றாய் சுவாசிப் பவர்கள். 6ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களை அவ்வப்போது அலைகழித்துக் கொண்டுதான் இருக்கிறார். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும், தடுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருக்கும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பங்குகள் மூலம் பணம் வரும். தந்தை வழியில் உதவிகள் உண்டு.

தந்தையாருக்கு இருந்து வந்த நோய் நீங்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் ஒருபக்கம் செலவினங்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். 4ம் வீட்டிலேயே கேது தொடர்வதால் தாயாருக்கு கழுத்து, காது மற்றும் முதுகு வலி வந்துபோகும்.

யாருக்காகவும் கரண்டர் கையொப்பமிட வேண்டாம். உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்றிருந்தாலும் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் திறமைகள் குறைந்துவிட்டதாக நினைப்பீர்கள். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள்.

கன்னிப் பெண்கள் காதல் கசந்து இனிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அலர்ஜி, இன்பெக்ஷன் குறையும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்கும் புதிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். இரும்பு, கட்டிடம், உணவு, மருந்து, ஆடை வகைகளால் லாபம் வரும்.

உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். தலைமையுடன் மோதல் வரும். ஒருதலைப் பட்சமாக மூத்த அதிகாரி நடந்து கொள்கிறார் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும்.

அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். கலைத்துறையினர் முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகும். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். விவசாயிள் பூச்சித் தொல்லை, எலித் தொல்லையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தப் பாருங்கள். நவீனரக உரங்களை பயன்படுத்தி மகசூலை பெருக்குவீர்கள். தடைகளும், மனஉளைச்சலும் குறைந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 18, 19, 20, 21, 28, 29, 30, 31
ஜனவரி : 5, 7, 8, 10.

சந்திராஷ்டம தினங்கள் : டிசம்பர் 22ம் திகதி காலை 11 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம் : நடராஜப்பெருமானை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு இயன்றளவு உதவுங்கள்.